Thursday, May 10, 2007

விண் நோக்கு

பழநி மலைக்குப்
பால் காவடி எடுத்தான்
போன வருடம்!!

திருப்பதி உண்டியலில்
பத்தாயிரத்தைப்
பத்துமாதப் பாக்கியுடன்
சேர்த்துப் போட்டான் போன மாதம்!!

திருச்செந்தூரில் சஷ்டி விரதம்
இருந்து திரும்பினான் போன வருடம்!!

சமயபுரத்தாளுக்கும் மண்டைக்காட்டு அம்மனுக்கும்
கொடுத்தது போதாது என்று
அன்னை வேளாங்கண்ணிக்கும் அருகில் உள்ள
நாகூர் தர்காவுக்கும் அள்ளிக் கொடுத்தான்!!

அரிசி வாங்குவதற்குப் பண்ம் இல்லை என்று
5 ரூபாய் கடனாகப் கேட்ட
அடுத்த வீட்டுக்காரனிடம் சொன்னான் -----
இல்லவே இல்லை என்று!!!!!!

0 comments: