Tuesday, April 10, 2007

என் பெண்.....

இரவு பத்து மணி
ஆனாலும் உன் சிந்தனை.....

உன் பிரிவினில்
வாடுவதால் தினம் சோதணை......

உன் பார்வைதனை
என் மீது துரத்திவிடு

போகட்டும் என்று
என்னோடு வாழ்ந்துவிடு.......

வேகம்

அலையின் வேகம்
கரை அறியும்!

காற்றின் வேகம்
கிளை அறியும்!

பூவின் வேகம்
வண்டு அறியும்!

புவியின் வேகம்
விஞ்ஞானம் அறியும்!

நிலவின் வேகம்
விண் அறியும்!

என்னவளின் வேகம்
நான் அறிந்திருந்தால்
என் இதயத் துடிப்பு
முடிவே இல்லாமல் தொடர்ந்திருக்கும்................

Thursday, April 5, 2007

(அ) நியாயம்

என்னடி இது நியாயம்?

என் இதயத்தை
திருடியவள் நீ --

தனிமைச் சிறையில்
தண்டணை பெறுவது நானா?

எனக்குத் தெரியும் -- நீ
விறும்புவது என்னையல்ல....
என் கவிதைகளைத் தான் என்று......

ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல....
நான் தான் என்று.........

கவிதை வேண்டும்

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீதானடி.....
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி......
காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சியம் சொல்வேன், சத்தியம் செய்வேன்!
" கவிதை தான் வேண்டும் எனக்கு " ----- என்
கவிதை நீதானடி.

புதிதாய் பிறப்பேன்......

உன் துரோகத்தால்
தொலைந்து போனது
நிம்மதி மட்டும் அல்ல...
நிஜமான என் நேசமும் தான்.....

உன் நயவஞ்சகத்தால்
நசுங்கிப் போனது
நட்பு மட்டுமல்ல......
நாளையைப் பற்றிய நம்பிக்கையும் தான்.....

உன் கபட பார்வையில்
கருகிப் போனது
கனவுகள் மட்டுமல்ல.....
எல்லாரும் நல்லவர்கள்
என்ற எண்ணமும் தான்.....

இப்போது ஏமாற்றிய நீயோ
ஏக சந்தோஷத்தில்....
ஏமாளியான நானோ
இடி வேதனையில்.....

என்னுடைய
இந்த சோகமும்.....
உன்னுடைய ஏமாற்றும் வித்தையும்
என்றும் நிரந்தரமில்லை....
எப்போதும் வஞ்சகங்கள்
வாழ்ந்து விடுவதுமில்லை.....

காலங்கள் மாறுகிற போது.....
மனக் காயங்கள் ஆறுகிற போது....
மீண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்
இன்னொறு முறை
ஏமாறாமல் இருப்பதற்கு!!!!!

புதிதாய் பிறப்பேன்......

உன் துரோகத்தால்
தொலைந்து போனது
நிம்மதி மட்டும் அல்ல...
நிஜமான என் நேசமும் தான்.....

உன் நயவஞ்சகத்தால்
நசுங்கிப் போனது
நட்பு மட்டுமல்ல......
நாளையைப் பற்றிய நம்பிக்கையும் தான்.....

உன் கபட பார்வையில்
கருகிப் போனது
கனவுகள் மட்டுமல்ல.....
எல்லாரும் நல்லவர்கள்
என்ற எண்ணமும் தான்.....

இப்போது ஏமாற்றிய நீயோ
ஏக சந்தோஷத்தில்....
ஏமாளியான நானோ
இடி வேதனையில்.....

என்னுடைய
இந்த சோகமும்.....
உன்னுடைய ஏமாற்றும் வித்தையும்
என்றும் நிரந்தரமில்லை....
எப்போதும் வஞ்சகங்கள்
வாழ்ந்து விடுவதுமில்லை.....

காலங்கள் மாறுகிற போது.....
மனக் காயங்கள் ஆறுகிற போது....
மீண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்
இன்னொறு முறை
ஏமாறாமல் இருப்பதற்கு!!!!!